தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்த சரத்குமார் தற்போது அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படி சினிமா ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சமத்துவ மக்கள் கட்சி தலைவராக அரசியலில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது அரசியல் குறித்து சரத்குமார் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் சரத்குமார் கண்டிப்பாக முதல்வராக பணியாற்றுவாராம். மற்றவர்கள் போல் இது சாதாரண ஆசை கிடையாதாம், இது தான் அவருடைய லட்சியமாம். மேலும் அவர் கட்சியில் இருக்கும் தொண்டர்கள் டாஸ்மாக் கடைக்கு சென்றால் கட்சியில் இருந்து தூக்கி விடுவாராம். அதுமட்டுமின்றி, கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை இருக்கும்படி செயல்படுத்துவேன். மேலும் சரியாக பணியை செய்யாமல் இருக்கும் அரசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்வேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.