அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவசரகாலத்தில் பணமில்லா சிகிச்சைத் திட்டத்தை (CTSE), கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மேற்கொண்டு வந்ததால், பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் CTSE திட்டத்தை இந்திய ரயில்வே திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
சென்னை மக்களே…, இவர்களுக்கு தான் நிவாரணத் தொகை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!