இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில் இருந்து இன்று (பிப்ரவரி 21) ஓய்வு பெற்றுள்ளார்.
சானியா மிர்சா
இந்திய டென்னிஸ் விளையாட்டின் தரத்தை உலகளவில் கொண்டு சேர்ந்த பெருமைக்கு சொந்தக்காரி சானியா மிர்சா. கடந்த 2003 ஆம் ஆண்டில் டென்னிஸ் துறையில் தடம் பதித்த சானியா மிர்சா இதுவரை செய்த சாதனைகள் ஏராளம். அந்த வகையில், 20 ஆண்டு கால டென்னிஸ் வாழ்க்கையில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 8 ஆசிய கோப்பைகளை வென்றுள்ள சானியா மிர்சா மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜூனா விருதையும் பெற்றுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மாநிலத்தில் 700 க்கும் மேல் காவல் துறை காலிப் பணியிடங்கள் அறிவிப்பு., அமைச்சர் குட் நியூஸ்!!
தற்போது துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட சானியா மிர்சா இன்று தனது சர்வதேச விளையாட்டு பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார். இந்த ஆட்டத்தில் ரஷ்யாவின் வெர்னோகியா- லியூடிமிலா ஜோடியுடன் மோதிய சானியா மிர்சா – மேடிசன் ஜோடி 4-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவியது. தற்போது 36 வயதான சானியா மிர்சா தனது கணவர் சோயிப் மாலிக் மற்றும் மகன் இசானுடன் வசித்து வருகிறார்.