பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது என்றே சொல்லாம். தொடர்ந்து அர்ச்சனா மற்றும் நிஷா இடையே பல கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் போன வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சனம் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று அதிரடியாக பல விஷயங்கள் நடக்க போகிறது என்று ப்ரோமோவை பார்த்தாலே தெரிகிறது. ஏனெனில் அனிதா மற்றும் நிஷா இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மறுபடியும் அனிதாவையே அனைவரும் நேரடியாக குத்துவதால் அனிதாவும் தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்றே சொல்லலாம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் ஆரிக்கு அடுத்ததாக அனிதாவும் களமிறங்கியுள்ளார். இதனால் அனிதாவிற்கு மக்கள் சப்போர்ட் அதிகரிக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் மூன்றாவது ப்ரோமோவும் வெளியானது.
அனைவரும் தீயாய் கேமை விளையாண்டு கொண்டிருக்க ஷிவானி பாலா வழக்கம் போல ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளனர். ஷிவானி ரவுடி என்று சொல்ல அதற்கு பாலாஜி வெட்கப்பட பல சம்பவங்கள் நடந்தேறியது.ஷிவானி உரிமையாக பாலாஜி கையை பிடித்து இழுப்பதும் மறுபடியும் வெக்கப்படுவதும் என பல காதல் காட்சிகள் மூன்றாவது ப்ரோமோவில் வெளியானது.
இந்நிலையில் தற்போது சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கப்போவதாக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நோ சனம் நோ பிக் பாஸ் என்ற ஹாஸ் டேக் வைரலாகி வரும் நிலையில் சனம் மறுபடியும் வீட்டிற்குள் வந்தால் டைட்டிலை கைப்பற்ற கூட வாய்ப்பு உள்ளது.