கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வர்த்தகம் மிகப்பெரிய சரிவை கண்டது. இதன் விளைவாக கச்சா எண்ணெயின் விலை பெருமளவு குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த மே மாதம் முதல் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் காரணாமாக கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி உயர்த்தி வருகின்றன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிக் பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் சனம்??
சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51, ஒரு லிட்டர் டீசல் ரூ.79.21 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.