திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 25-ம் தேதி நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதேசி தரிசனத்திற்கான முன்பதிவு தொடங்கியது.
வைகுண்ட ஏகாதேசி:
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி நடக்கவுள்ளது. இந்து மக்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். அன்று இரவு முழுவதும் கண் விழித்து, திருமாலின் புகழ்பாடி, விடியற்காலையில் பெருமாள் கோவிலுக்கு செல்வர். அங்கே வடக்குத்திசையில் உள்ள கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கும். அது இன்று திறக்கப்படும் அதை “சொர்க்க வாசல்” என்பர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒருவொரு வருடமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறந்து பல லட்சம் மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
தளபதி விஜய் 65 அதிரடி அறிவுப்பு!!
பக்தர்கள் அனைவரும் tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் தரிசனத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.