‘தூக்கில் தொங்கியதற்கான எந்த அடையாளமும் சித்ராவிடம் இல்லை’ – சந்தேகத்தை எழுப்பும் ரசிகர்கள்!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று மரணமடைந்த நிலையில் அவரது மரணம் தற்கொலை தான் என்று  இன்று நடந்த பிரேத பரிசோதனை முடிவில்  உறுதியாகியுள்ளது. இதில் பலரும் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா

சின்னத்திரை நடிகை சித்ரா பல வருட கடின உழைப்பின் மூலம் சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவர் விஜய் டீவி யில் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற நாடகத்தின் முல்லை கதாபாத்திரம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். இந்நிலையில் அவர் நேற்று மரணமடைந்தது சின்னத்திரை உலகத்தையே அதிர்ச்சியடைய செய்தது.

சித்ரா டிசம்பர் 10ம் தேதியன்று நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரவு 2 மணியளவில் தான் 4 நாட்களாக தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தன் வருங்கால கணவருடன் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிள் அவர் ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலத்தை கைப்பற்றிய போலீசார் சித்ராவின் மரணம் தொடர்பாக அவருடைய கணவர் மற்றும் நண்பர்களுடன் விசாரித்து வந்தனர்.சித்ராவின் தாயார் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசிடம் தெரிவித்து உள்ளார். காரணம் சித்ராவின் முகத்தில் காயங்கள் இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொதுவாக ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அவரது கழுத்து எலும்புகள் உடைந்து விடும். மேலும் சுவாசிக்க முடியாமல் திணறும் போது நாக்கு வெளியில் தள்ளும். கழுத்திலும் தூக்கில் தூங்கியதால் அதன் காயமும் இருக்கும். ஆனால் இதில் எந்த அறிகுறியும் சித்ராவிடம் இல்லை.

இந்நிலையில் அவரது உடலின் பிரேத பரிசோதனை ஆய்வு இன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடை பெற்றது. இந்நிலையில் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகின. அதில், சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். முகத்தில் இருக்கும் காயங்கள் சித்ராவின் நகங்கள் பட்டதினால் தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here