சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் தெலுங்கு சீரியல் நாயகி பிரியங்கா தனக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத சோகமான தருணங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
சன் டிவி தொடர் ‘ரோஜா’
சன் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் ‘ரோஜா’. சன் டிவியின் TRPக்கு இந்த தொடரின் வரவேற்பு தான் காரணம். இந்த தொடரில் நாயகனாக தெலுங்கு தொடரின் முன்னணி நடிகர் சிப்பு சுரேன் நடித்துவருகிறார். நாயகியாக தெலுங்கு தொடரின் புகழ் பிரியங்கா நடித்து வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நடிகை பிரியங்கா தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன்னாக சில தெலுங்கு திரைப்படங்களில் முக்கியமான துணை நடிகையாக நடித்துள்ளார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் 2010ம் ஆண்டு வெளிவந்த நடிகர் சித்தார்த் மற்றும் ஹன்சிகா நடித்துள்ள ‘தீயா வேல செய்யணும் குமாரு’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் பிரியங்கா.
சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு – இடைக்கால பட்ஜெட் 2021-22 Live Updates!!
தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா 3’ படத்திலும் நடித்துள்ளார் இவர். சரியான தமிழ் கூட பேச வராத நடிகை பிரியங்காவுக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் உள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா தனது இளமைக்காலத்தில் அவர் அனுபவித்த கஷ்டங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘என்னுடைய கைப்பையில் எப்போதும் பிஸ்கட் பாக்கெட்டுகள் இருக்கும். யாரும் பசியால் வருந்துவதை கண்டால் எனக்கு வருத்தமாக இருக்கும். ஏனென்றால் சிறுவயதில் எத்தனையோ நாட்கள் நான் உணவு இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். ஒரு நாள் சாப்பாடு இருக்கும், மற்றொரு நாள் சாப்பாடு இருக்காது. விறகு அடுப்பில் கூட சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம்’ என அவரது மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்துள்ளார் நடிகை பிரியங்கா.