டிஎன்ஏ ரிப்போர்ட்டை தேட வீட்டிற்கு வரும் பாரதி, வெண்பா – மாட்டிக்கொள்வாரா கண்ணம்மா??

0

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து பாரதியின் வீட்டில் கண்ணம்மா வேலை பார்த்துக்கொண்டிருக்க எதிர்பாராத விதமாக பாரதியும், வெண்பாவும் வீட்டிற்கு வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

தொடர்ந்து பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஹேமாவால் வீட்டிற்கு வரும் கண்ணம்மா அனைவரையும் பார்த்து அதிர்ச்சியும் அடைந்தார். ஆனால் சௌந்தர்யா குடும்பம் மிகவும் சந்தோஷமடைந்தது.

2 நாட்களாக இந்த எபிசோடு முழுக்க கண்ணம்மா, பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடந்து விட்டதாக நினைத்து கொண்டிருந்தார். ஹேமாவையும் வெண்பாவின் குழந்தை என்றே நினைத்துக் கொண்டுள்ளார் கண்ணம்மா. இதனிடையே லக்ஷ்மியை காட்டுகின்றனர். ஹவுஸ் ஓனர் வீட்டில் இருக்கும் லட்சுமி சேகரை பார்த்து பயப்படுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எதோ தவறாக இருப்பது போலவே நினைத்துக் கொள்கிறார். லட்சுமி உடன் சேர்ந்து சாப்பிடும் சேகர் லக்ஷ்மிக்கு ஊட்டி விடுகிறார். ஆனால் அதனை மறுத்து விடுகிறார். எங்க அம்மாவை தவிர யாரு ஊட்டி விட்டாலும் சாப்பிட மாட்டேன் என்று அங்கிருந்து கோவமாக சென்று விடுகிறார்.

அடுத்ததாக அகிலன் பாரதி பாடிய பாட்டை ஸ்பீக்கரில் போட்டு விடுகிறார். ‘பாரதி காதலியே கண்ணம்மா’ பாடலை கேட்டதும் கண்ணம்மாவிற்கு பழைய நியாபகங்கள் வர கண்கலங்குகிறார். அப்பொழுது அங்கு வரும் அகிலன் நீங்களும் அண்ணாவும் இப்படி ஒரு வாழ்க்கையை தானா சந்தோசமாக வாழ்ந்திங்க என்று சொல்கிறார்.

கண்ணம்மா இப்போது எதுவும் சொல்லாமல் இருக்க அதற்கு அகிலன் அஞ்சலியை அழைத்து கொண்டு வந்து கண்ணம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். கண்ணம்மா கண்கலங்கி இருவரையும் ஆசீர்வதிக்கிறார். இப்படி நல்லபடியாக போயிக்கொண்டிக்க திடீரென பாரதி வெண்பாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இதனை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியாகிறது. வீட்டிற்கு உள்ளே வரும் பாரதி ஏதோ நல்ல சமையல் வாடை வருதே என்று சொல்ல வீட்டில் முக்கியமான கெஸ்ட் வந்திருப்பதாக ஹேமா சொல்லிவிடுகிறார். பாரதி அவர்களை பார்க்க வேண்டும் என்று சொல்ல பாரதி குரலை கேட்டு ஒளிந்து கொள்கிறார் கண்ணம்மா. சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு மிகவும் கூச்ச சுபாவம் என்று சொல்கிறார்.

சரி என்று வெண்பாவை அழைத்துக்கொண்டு அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டை தேடச் செல்கிறார் பாரதி. ஆனால் வெண்பாவிற்கு ஏதோ ஒன்று தவறாக தெரிகிறது. ஆன்ட்டி ஏன் இவ்வளோ சந்தோசமாக இருக்காங்க. இதுல எதோ ஒன்னு இருக்கு என்று நினைத்து கொள்கிறார். பின்பு இருவரும் டெஸ்ட் ரிப்போர்ட்டை தேடிக் கொண்டுள்ளனர்.  இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here