பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துவக்க வீரர்:
இந்தியா கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் துவக்க வீரராகவும் இருக்கிறார், ரோஹித் சர்மா. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஏன் பாகிஸ்தானில் கூட இவருக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது துணை கேப்டனாகவும் இந்தியா அணிக்கு உள்ளார். இவர் இந்தியா அரசால் வழங்கப்படும் உயரிய விருதான “கேல் ரத்னா” விருதிற்கு பி.சி.சி.ஐ ஆல் பரிந்துரைக்கப்பட்டார்.
தற்போது நடக்கவுள்ள ஐ.பி.எல் போட்டிகளுக்காக அரபி நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆக உள்ளார். இன்று அமீரகத்தில் போட்டிகளுக்கான பயிற்சிகளை தனது அணி வீரர்களுடன் மேற்கொண்டார்.
⚡️ Up and running ?♂️#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL pic.twitter.com/4nuNgzitLi
— Mumbai Indians (@mipaltan) August 29, 2020
சிறுவர்களுடன் விளையாட்டு:
அதே போல் இன்று “தேசிய விளையாட்டு தினம்” அதனை கொண்டாடும் விதமாக அவர் தந்து ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் பள்ளி சிறுவர்கள் போல் உள்ளவர்களிடம் விளையாடுவது போல் உள்ளது.
I'll always take up the chance to play the sport I love anywhere I go. #NationalSportsDay should encourage us to pick up a sport and just have fun ? pic.twitter.com/3shnDdI1fN
— Rohit Sharma (@ImRo45) August 29, 2020
அவர் அதில் கூறியிருப்பதாவது “இன்று தேசிய விளையாட்டு தினம்” விளையாட வேண்டும் மற்றும் அதனை ஒரு பொழுதுபோக்காகவும் கருத வேண்டும். நான் யாருடனும் கிரிக்கெட் விளையாடுவேன்” என்று கூறி பதிவிட்டுள்ளார்.