ரசிகர்களால் ‘ஹிட்மேன்’ என்று அழைக்கப்படக்கூடிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக 30 முறைகள் இரட்டை இலக்க எண்களில் ரன்களை எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரோஹித்.
காதலர்களை குஷிப்படுத்தும் டைட்டில் பாடல்…,’குஷி’ டீம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்…,
அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 57 ரன்களை எடுத்ததன் மூலம் இந்த சாதனையை பெற்றிருக்கிறார். அந்த வகையில், இதுவரை 9 முறை ஆஃப் செஞ்சுரி மற்றும் 4 முறை செஞ்சுரி அடித்திருக்கிறார் ரோஹித் சர்மா. இவருக்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே 29 முறை இரட்டை இலக்க ரன்களை எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.