கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.