சமீபகாலமாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஜெட்வேகத்தில் தக்காளி விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சொல்லப்போனால் சந்தையில் ரூபாய் 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, காய்கறி வரத்து குறைவு ஆகிய இரண்டும் தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை அதிகரித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.30 உயர்ந்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.150க்கும் பீன்ஸ் ரூ.90க்கும் இஞ்சி ரூ.250க்கும் விற்பனை செய்யப்படுகிறது.