பிக் பாஸ் அர்ச்சனாவிற்கு விஜய் டிவி கொடுத்த வாய்ப்பு – கடுப்பில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் வெற்றி பெறுவதற்கு அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களும் முக்கிய காரணமாவார்கள். அப்படிப்பட்ட தொகுப்பாளர்கள் வரிசையில் புதியதாக இணைந்துள்ளார் பெண் தொகுப்பாளினி ஒருவர். இதுவரை விஜய் டிவியில் புகழ் பெற்று விளங்கும் பிற தொகுப்பாளர்களுக்கு இவர் போட்டியாளராக இருப்பாரா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.

யார் அந்த தொகுப்பாளினி

விஜய் டிவி என்றாலே அதன் பிரபல தொகுப்பாளர்களாக விளங்கும் DD, கோபிநாத், மாகாபா ஆனந்த், பிரியங்கா ஆகியோர் தான் நினைவுக்கு வருவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைலும் அதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமும் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுகொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவர்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை குறி வைக்கும் கொரோனா – கேரளாவில் தீவிர கண்கணிப்பு!!

இந்நிலையில் தற்போது புதிதாக தொகுப்பாளினி ஒருவர் விஜய் டிவியில் களம் இறங்குகிறார். அவர் வேறு யாருமில்லை. நம்ம பிக்பாஸ் அர்ச்சனா தான். அவர் முன்னதாக ஜீ டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்.

தொடர்ந்து தற்போது அவர் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பப்படவுள்ள “காதலே காதலே” எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் விஜய் டிவியின் தொகுப்பாளினியாக களம் இறங்குகிறார். இவர் யார் யாருக்கெல்லாம் போட்டியாக இருக்கப்போகிறார் இவரது நிகழ்ச்சி எப்படி ரீச் ஆகும் என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here