‘சித்தி 2’ தொடரில் ராதிகாவுக்கு பதில் இவர் தான் நடிக்கிறாராம் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘சித்தி 2’ தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராதிகா தொடரிலிருந்தது விலகியதை அடுத்து, அந்த தொடரில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘சித்தி 2’ தொடர்

கடந்த 1999ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ‘சித்தி’. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவர் மத்தியிலும் இந்த தொடருக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் இருந்து வந்தது. பொதுவாக 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த தொடர் எது என்று கேட்டால் தயக்கமேயில்லாமல் ‘சித்தி’ என்று தான் கூறுவார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த காலகட்டங்களில் ஏறக்குறைய மூன்று வருடங்கள் வரை வெற்றிகரமாக ஒளிபரப்பான ஒரு தொடர் ‘சித்தி’ ஆகும். இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் சிவக்குமார், சுபலேகா, யுவராணி, ரியாஸ் கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ‘சித்தி 2’ தொடரின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த தொடரிலும் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவருடன் பிரபல சின்னத்திரை நடிகை ப்ரீத்தி சர்மா, நந்தன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

‘நான் சமையல்காரி தான் உங்க சொந்தக்காரி இல்லை’ – சௌந்தர்யாவை எடுத்தெறிந்து பேசும் கண்ணம்மா!!

இந்நிலையில் 250க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ள ‘சித்தி 2’ தொடரிலிருந்து நடிகை ராதிகா விலகப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் ராதிகா நடித்து வந்த சாரதா கதாபாத்திரத்திற்கான இறுதி படப்பிடிப்பு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை ராதிகாவின் கதாப்பாத்திரத்துக்கு பதிலாக பிரபல வெள்ளித்திரை நடிகைகளான ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயாணி ஆகிய மூவரில் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இம்மூன்று நடிகைகளும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ராதிகா நடித்துள்ள சாரதா என்ற கதாப்பாத்திரத்துக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here