பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்?? என மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. தொடர்ந்து பல ட்விட்டுகளுடன் கதைக்களம் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் இத்தனை வருடங்களுக்கு பிறகு கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு வருகிறார். அதுவும் ஹேமாவால் அந்த வீட்டிற்கு வருகிறார் கண்ணம்மா.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது வீட்டில் உள்ள அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவே உள்ளது. மேலும் வீட்டில் உள்ளவர்கள் யார் என்றே தெரியாதது போலவே காட்டிக்கொள்கிறார் கண்ணம்மா. சௌந்தர்யா எவ்வளவு பேச முயற்சித்தும் கண்ணம்மா பிடிகொடுக்கவில்லை. மேலும் பாரதிக்கும் வெண்பாவிற்கு திருமணம் ஆகிவிட்டதாக தவறாக நினைத்து கொள்கிறார்.
இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வேலையை முடித்துக்கொடுக்கும் கண்ணம்மா கிளம்புவதாக சொல்ல அவருக்கு சேலையும் தேவையான பணமும் எடுத்து வைக்கிறார். கண்ணம்மா கொடுத்தால் வாங்க மாட்டார் என்று சேலைக்குள் பணத்தை ஒழித்து வைக்கிறார் சௌந்தர்யா.
அடுத்ததாக கண்ணம்மாவை ஹேமா அழைத்து வருகிறார். சௌந்தர்யா ஒரு தட்டில் இதெல்லாம் வைத்து கொடுக்க அதனை வாங்க மறுக்கிறார். தான் இந்த வீட்டிற்கு வேலைக்கு தான் வந்தேன் என்று இந்த நான் உங்களுக்கு சொந்தக்காரி இல்லை என்று எடுத்தெறிந்து பேசுகிறார் கண்ணம்மா.
97% கொரோனாவுடன் போராடும் pfizer தடுப்பு மருந்து – சோதனை அமைச்சகம்!!
அதன் பிறகு ஹேமா வாங்கிக்கொள்ள சொல்லி கெஞ்ச கண்ணம்மா அதனை கையில் வாங்காமல் புடவையை விரித்து வாங்கிக்கொள்கிறார். மேலும் ஹேமா கண்ணம்மாவை சமையல் ஆன்ட்டி என்று சொல்ல சௌந்தர்யா எதுக்கு அவங்களை ஆன்ட்டினு கூப்டுற. அவங்களை பார்த்தால் உனக்கு எப்படி இருக்குனு சொன்ன என்று கேட்க ஹேமா அம்மா என்று சொல்கிறார். இதனால் கண்ணம்மா பரிதவித்து போகிறார்.