பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

இந்த வருடம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அதிலும் கொரோனாவால் நாடே கதிகலங்கி போயுள்ளது. திரையுலகினரை சேர்ந்த பலருக்கும் இந்த தொற்று பரவி வரும் நிலையில் தென்னிந்தியாவில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் வெளியான ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்த வர தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார். ஜெனிலியாவிற்கு பிறகு அந்த குழந்தை தனமான நடிப்பு ரகுல் ப்ரீத் சிங்க்கு தான் பொருத்தமாக இருந்தது. தற்போது மாலத்தீவு சென்று வந்த புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா சோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, ‘தனக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் பாசிட்டிவாக வந்துள்ளது.

அரைகுறை ஆடையுடன் மாலத்தீவில் யோகா செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!!

இதனால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் குணமாகி ஷூட்டிங்கிற்கு வருவேன். தயவு செய்து என்னை இதற்கு முன் சந்தித்தவர்கள் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். இதனால் சோகமடைந்த ரசிகர்கள் ரகுல் ப்ரீத் சிங் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here