சூப்பர் ஸ்டார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். அதுபோக பல முன்னணி நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ஆன்லைன் முன்பதிவு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடுதல் டிக்கெட் கேட்டு ரஜினி ரசிகர்கள் தியேட்டர் மேலாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, திண்டுக்கல் ஊரில் பிரபல திரையரங்கமான உமா தியேட்டரில் மேலாளராக பணி புரியும் மாயாண்டி என்பவரிடம் டிக்கெட் தொடர்பான ஆன்லைன் பதிவு தொடர்பாக கண்ணன், ஜோசப் ஆகிய இருவரும் கூடுதலாக டிக்கெட் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் மாயாண்டி காதில் அந்த இருவரும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாயாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.