தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கனமழை விடாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா பகுதிகளில் நாளுக்கு நாள் மழையின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் அடுத்த ஏழு நாளைக்கு வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த ஏழு நாளைக்கு தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.