விஜய் டிவியில் பிரபலமான சீரியலில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. ஆரம்பித்த சில நாட்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அண்ணன், அண்ணி வாழ்க்கைக்காக சரவணனை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளும் சந்தியா சிவகாமியிடம் திருமணத்திற்கு சம்மந்தம் என்று கூறுகிறார்.
ராஜா ராணி 2
இது வரையிலும் அப்பா, அம்மா இருக்கும் வரையில் சந்தோசமாக சுற்றி திரிந்த சந்தியா, அவர்கள் இறந்த பிறகு பல விஷயங்களை இழக்கிறார். தன் அண்ணனின் மிரட்டலுக்காக கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். மேலும் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற தன்னுடைய கனவு சுக்குநூறாக உடைந்து போவதை எண்ணி அழுது கொண்டிருக்கும் சந்தியாவை இன்று சரவணன் பெண் பார்க்க வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் சரவணன் புகைப்படத்தை பார்த்தவுடன் அவர் மீது காதலும் வருகிறது. அதாவது ஏற்கனவே கோவில் மற்றும் பார்க்கில் சந்தியாவை பார்த்த நியாபகம் வருகிறது. அதோடு சந்தியாவின் அண்ணி மணியிடம் மாப்பிள்ளையை பற்றி விசாரிக்க அவர் மாப்பிள்ளை எம்பிஏ பிடித்திருப்பதாக பொய் சொல்கிறார். இருந்தாலும் சந்தியாவின் அண்ணிக்கு ஏதோ இருக்கிறது என்று சந்தேகம் வருகிறது.
ஆனால் சந்தியா தன் அண்ணன், அண்ணி வாழ்க்கைக்காக இதை செய்து தான் ஆக வேண்டும் என்று மனதுக்குளேயே புலம்பி அழுகிறார். இந்த கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று அண்ணி எவ்வளவு கூறியும் சந்தியா கேட்பதாக இல்லை. நீங்களும் அண்ணனும் ஒன்றாக வாழ வேண்டும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
வயிற்றில் வளரும் குழந்தைக்கு அது தான் நல்லது என்றும் கூறி சமாதானம் செய்கிறார். அதோடு சிவகாமி, சந்தியாவிடம் தன் மகனை திருமணம் செய்துகொள்ள சம்மதமா? என்று கேட்க சந்தியா முழு சம்மதம் என்று கூறுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.