ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி விலகியதால் நடராஜனுக்கு டி-20 அணியில் இடம் கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டியில் மட்டும் ரோஹித் சர்மா விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வாழ்த்து:
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. டிசம்பர் 17-ம் தேதி முதல் டி20 தொடரும், ஜனவரி 15-ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் என மிக நீளமான தொடர் நடைபெறப்போகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக இரு தரப்பு கிரிக்கெட் வாரியங்களும் செய்து வருகின்றன.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், நடராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ‘கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது பந்து வீச்சால் திக்குமுக்காட செய்த சேலம் மண்ணின் மைந்தன் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கி பயணத்தில் வெற்றிகள் பெற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று அவர் ட்விட் செய்துள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சேர்க்கப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. டி20 அணியில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.