ராஜா ராணி 2 – சந்தியாவிற்காக 3 மாதம் டைம் கொடுக்கும் சிவகாமி! அர்ச்சனாவின் சதி தெரியவருமா??

0

‘ராஜா ராணி 2’ தொடரில் சந்தியா படித்தவர் என்கிற உண்மை அறிந்ததும் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவாகியுள்ளது. ஒருவழியாக சிவகாமியை சமாதானம் செய்யும் சந்தியாவுக்கு மூன்று மாதம் காலஅவகாசம் கொடுக்கிறார் சிவகாமி.

‘ராஜா ராணி’ தொடர்

இன்றைய ‘ராஜா ராணி 2’ தொடரில் சந்தியாவின் படிப்பு விஷயத்தை மறைத்ததற்கான காரணத்தை அம்மா சிவகாமியிடம் சரவணன் கூறுகிறார். நம்ம யாரையும் ஏமாத்தணும்னு சந்தியா நினைக்கவில்லை, சந்தியா படித்திருந்தாலும் அவள் இதுவரை திமிராக யாரிடமும் நடந்து கொண்டதில்லை என சந்தியாவுக்காக வாதாடுகிறார் சரவணன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சந்தியா அன்றைக்கு வீட்டை விட்டு வெளியேறும் போது நீ சொன்னதெல்லாம் பொய் தானே என சிவகாமி சரவணனிடம் கேட்கிறார். சந்தியாவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு மட்டும் கொடுக்க சொல்லி சரவணன் சிவகாமியிடம் கெஞ்சுகிறார். அப்போது இன்னும் மூன்று மாசம் சந்தியாவுக்கு அவகாசம் கொடுக்கிறேன், நான் வைக்கப்போகும் பரீட்சையில் சந்தியாவோட நேர்மை, உண்மை ஜெயிச்சதுன்னா அவ இங்க இருக்கலாம்.

இல்லன்னா நீயே அவளை அவளோட வீட்ல கொண்டுபோய் விடணும் என்று கண்டிப்புடன் கூறுகிறார் சிவகாமி. சிவகாமியின் சவாலுக்கு ஒப்புக்கொள்கிறார் சந்தியா. வீட்டில், முள்ளுக்குள் நடந்து வந்த வேதனையால் கதறிக்கொண்டிருக்கிறார் அர்ச்சனா.

தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தோட்டத்திலிருந்து திரும்பி வந்த சிவகாமி, சரவணனுடன் தனியாக பேசிக்கொண்டிருக்கும் போது ஏன் வேவு பார்க்க வந்த, என அர்ச்சனாவிடம் கோபப்படுகிறார். சந்தியாவை காபி போட சொல்லி அனுப்பிவிட்டு, அர்ச்சனாவை இரவு சமைக்க சொல்லுகிறார் சிவகாமி.

இரவு உறங்கப்போகும்போது, சிவகாமியிடம் போட்ட சபதத்தில் கண்டிப்பாக ஜெயிப்பேன் என சந்தியா உறுதி கூறுகிறார். பின்பு கட்டிலிலிருந்து இறங்கி வந்த சந்தியா சரவணனிடம் கை கொடுத்து, சரவணன் அவளுக்காக செய்த எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லுகிறார். சண்டை முடிந்து அம்மாவுடன் பேசவைத்ததற்காக சரவணனும் நன்றி கூறுகிறார். பின்பு குட் நைட் சொல்லிவிட்டு உறங்கச்செல்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here