தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்துள்ள அறிவிப்புகள் குறித்து பா. சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். அதே போல் தமிழகத்தில் ஒரு போதும் தாமரை மலராது என்று அரசியல் பிரமுகர் பா.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
பா. சிதம்பரம் பேட்டி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடந்த முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பல கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அரசியல் பிரமுகரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல்வாதியுமான பா.சிதம்பரம் வகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் பேசினார். அதில் அனைத்து கட்சிகள் குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது, “தேர்தல் வர போகிற அவசரத்தில் அதிமுக அரசு பல விதமான கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்து வருகின்றது”
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
“அமைச்சரவையை கூட கூட்டாமல் நகைக்கடன் தள்ளுபடி குறித்து தாக்கல் செய்திருப்பது முறையற்றது. அது விதிமீறல் என்று கூட கூறலாம். நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசிற்கு எந்த வித உரிமையும் இல்லை. அதே போல் பட்ஜெட் என்றால் அது 5 நாட்களுக்கு முன்பே தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 5 வருடங்களாக அதிமுக செய்தது ஊழல் ஆட்சி. அதனை மறைக்க இது போன்ற திட்டங்களை அறிவித்து வருகின்றனர்”
‘ஏ.எல்.விஜயை விட்டு பிரிந்ததும் பயத்துடன் தான் வாழ்ந்தேன்’ – மனம் திறக்கும் அமலா பால்!!
“இது ஒரு பக்கம் என்றால் பாஜ ஆட்சியும் இப்படி தான் உள்ளது. பாஜ ஒரு போதும் தமிழகத்தில் மலராது. பாஜக தமிழகத்தில் வேரூன்ற ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன். எனது கடைசி மூச்சு உள்ளவரை பாஜக தமிழகத்தில் ஆட்சியினை அமைக்க விட மாட்டேன். அதே போல் அதிமுக அரசு வெற்றிநடை போடும் அரசு இல்லை, வெற்றுப்பேச்சு அரசு” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.