‘ஏ.எல்.விஜயை விட்டு பிரிந்ததும் பயத்துடன் தான் வாழ்ந்தேன்’ – மனம் திறக்கும் அமலா பால்!!

0

இயக்குனர் ஏ.எல் விஜயுடனான தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகை அமலாபால். விவாகாரத்து நடந்தபோது அவருக்கு ஏற்பட்டிருந்த மனநிலை பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அமலாபால்

ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். தமிழில் வெளியான ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் அமலாபால். வித்தியாசமான நடிப்பால் சினிமாவில் தொடர்ந்து உயர்ந்து வந்த அமலாபாலுக்கு ‘தெய்வத்திருமகள்’, ‘மைனா’, ‘தலைவா’ ஆகிய திரைப்படங்கள் நல்ல பெயரை சம்பாதித்து தந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ் மட்டுமல்லாது மலையாள சினிமாக்களிலும் இவரது ஆதிக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் அமலாபால் நடித்துள்ள ‘தலைவா’ படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் நடிகை அமலாபாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

கோலத்தை அழிக்கும்போது கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் வெண்பா – சௌந்தர்யாவிடம் இருந்து தப்பிப்பாரா??

இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு ஆண்டு கழித்து இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். அதன்பின்பு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த அமலாபால் சில மாதங்களுக்கு முன்பு தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை அமலாபால் தனது முதல் திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அமலாபால் அளித்த பேட்டி ஒன்றில், ‘ஏ.எல் விஜய்யை விவாகரத்து செய்த போது, என்னுடைய முடிவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை பயமுறுத்தினார்கள். அந்த சமயத்தில் பயத்துடன் தான் நான் வாழ்ந்தேன். என்னுடைய சந்தோசம் மற்றும் மனநிலையை யாரும் புரிந்துகொள்ளவில்லை’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here