தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வரும் 6 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “இனி வரும் அடுத்த 6 நாட்களுக்கு [01-03.2021 முதல் 05-03-2021 வரை] பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும். வங்க கடலில் கடல் மட்டத்தில் நிலவும் எதிர் சுழற்சி (anti cyclonic circulation) காரணமாக கடலோர பகுதிகளில் கிழக்கு திசையிலிருந்து குறைந்த வேகத்துடன் கூடிய ஈரக்காற்று வீசுவதால் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் உயர்ந்த தங்க விலை – அதிர்ச்சியில் மக்கள்!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும், “தமிழகத்தின் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியசும் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு ஏதும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் எதுவுமில்லை.