‘அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன்’ – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

0

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி தமிழகத்துக்கான இலட்சிய தொலைநோக்கு திட்டத்தினை அறிவிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். பிறந்த நாள் கொண்டாடும் ஸ்டாலினுக்கு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் பிறந்தநாள்:

இன்று திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கட்சி தலைவர்கள் மட்டுமின்றி நடிகர்கள் கமல் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேசினார்.

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

அவர் கூறியதாவது, “இன்று என் பிறந்தநாளிற்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள். வரும் 7 ஆம் தேதி திமுக கட்சியின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் தமிழகத்திக்கான 10 ஆண்டு கால லட்சிய திட்டத்தினை அறிவிக்க உள்ளேன். அடுத்த 10 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு துறையும் அடைய வேண்டிய இலக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. மூத்த நிர்வாகிகள், பல துறைகளை சேர்ந்த அறிஞர்கள், கட்சி தலைவர்களுடன் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் மூலமாக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து அவர், “பல்வேறு துறையினை சேர்ந்த அறிஞர்களுடன் விவாதித்து உருவாக்கப்பட்ட தொலைநோக்கு ஆவணத்தை அடுத்த இருபது நாட்களில் இருபது கோடி குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் இன்னும் 2 மாதங்களில் நடைபெறும். தற்போது தி.மு.க. குறித்து மோடியும் அமித்ஷாவும் பேசியுள்ளனர். இனி ஒவொருவரும் பேசுவார்கள். ஊழலில் மூழ்கி திளைக்கும் அ.தி.மு.க. வுக்கு உதவி செய்வது யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்” என்றும் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here