‘உண்மையான மாமியார்னா எப்படி இருப்பாங்கன்னு நீ ஊருக்கு வந்து தெரிஞ்சுக்கோ’ -சந்தியாவை கேவலப்படுத்தும் சிவகாமி!!

0

இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியாவிற்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் வந்து கூறி விடுகின்றனர். இது சிவகாமிக்கு கோபத்தினை ஏற்படுத்த, தான் கல்லூரி பாராட்டு விழாவிற்கு செல்லாமல் ஊருக்கு வர இருப்பதாக சந்தியா கூறி விடுகிறார்.

“ராஜா ராணி 2” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று ஆதி ஸ்வீட் கடையில் வேலை பார்த்ததனால் மிகவும் கோபத்தில் இருக்கிறார். அப்போது பார்வதி அவரை ஏத்தி விடுவது போல பேசுகிறார். இதால ஆதிக்கு மேலும் மேலும் கோபம் அதிகமாகிறது. இப்படியாக இருக்க, சந்தியா ஆதிக்காக என்று நாளிதழ்களில் வேலைவாய்ப்பு குறித்து பார்க்கிறார்.

தனத்திற்காக மீண்டும் சண்டையிட்டு கொள்ளும் மீனா முல்லை – சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

அப்போது அங்கு வரும் சரவணனிடம் இது குறித்து கூறவும் , அவர் அதற்கு ஆரம்பத்தில் ஒரு வேலை பிடிக்காமல் தான் இருக்கும் என்றும் பின் அதுவே பிடித்து விடும் என்று கூறி சமாதானம் செய்கிறார். ஆனால், சந்தியா ஆதி படித்த பையன் என்றும் அவருக்கு பிடித்த வேலையினை தான் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார். பின், இருவரும் சேர்ந்து ஆதிக்காக வேலை வாய்ப்பு செய்திகளை சேர்த்து வைக்கின்றனர்.

பின், பார்வதியிடம் சிவகாமி தான் இன்னும் இரண்டு நாட்கள் வெளியூர் செல்ல இருப்பதாகவும், வீட்டினை கவனித்து கொள்ளுமாறும் கூறுகிறார். பார்வதி அப்போது சந்தியாவையும் வேலை பார்க்க சொல்லுமாறு அறிவுறுத்துகிறார். இதனால் சிவகாமிக்கு கோபம் வந்து விடுகிறது. பின், அங்கு இருந்து வரும் போது என்ன வாங்கி வர என்றும் கேட்கிறார்.

அப்போது மயிலு சந்தியாவையும் கேட்க சொல்கிறார். ஆனால், சந்தியா தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். பின், சந்தியாவின் காலேஜில் இருந்து சந்தியா 3 வது ரேங்க் எடுத்ததற்காக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருப்பதாக கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் சந்தியா மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். ஆனால், அது சிவகாமிக்கு கோபத்தினை வரவழைக்கிறது.மேலும் தான் தங்களுடன் ஊருக்கு வருவதாகவும் சொல்லுகிறார் சந்தியா. இதனால் சிவகாமி ஒரு மாமியார் எப்படி எல்லாம் இருப்பார்கள் என்று அந்த ஊரில் வந்து தெரிஞ்சிக்கோ என்று கேவலமாக பேசுகிறார். பின், அவர் சந்தியாவினை நன்றாக திட்டி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here