தனத்திற்காக மீண்டும் சண்டையிட்டு கொள்ளும் மீனா முல்லை – சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கூப்பன் கொடுக்கும் ஐடியாவை ஜீவா செயல்படுத்துகிறார். அதனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முல்லை மற்றும் தனம் இருவரும் கடைக்கு வருகின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஜீவா கூப்பன் ஐடியா குறித்து அனைவரிடமும் விளக்குகிறார். பின், அதற்கான சீட்டுகளையும் வாங்கி வருகிறார். அப்போது தனம் மற்றும் முல்லை இருவரும் கடைக்கு வருகின்றனர்.

அவர்களிடம் அந்த சீட்டுகளை காட்டுகின்றனர். அவர்களும் வாங்கி பார்த்து விட்டு மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். இப்படியாக இருக்க, தனம் கடைக்கு வரும் அனைவரிடமும் 500 கூப்பன் முறை குறித்து விளக்கி பொருட்களை வாங்க வைத்து விடுகிறார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். அதே போல் இரவில் அனைவரும் கூப்பன் ஐடியா பற்றி பேசுகின்றனர். அப்போது கதிர் கூப்பன் கடையில் இருப்பது குறித்து மக்களுக்கு தெரிவதில்லை. மக்களுக்கு இது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். பின், கூப்பன் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று அனைவரும் பேசுகின்றனர்.

இப்படியே பேசி விட்டு சென்று விடுகின்றனர். பின், காலையில் ஜீவா வெளியில் நிற்கும் போது ஒருவர் ஆட்டோவில் புதிதாக துவங்க இருக்கும் கடை குறித்து சொல்லுகின்றனர். இதனை ஏன் தங்களது கடைக்கு செய்ய கூடாது என்று ஜீவா யோசிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், அதனை வீட்டில் இருப்பவர்களிடம் கூறுகிறார். இந்த ஐடியா மிகவும் நல்ல ஐடியா என்று அனைவரும் வரவேற்கின்றனர். பின், அதனை செயல்படுத்துவது குறித்து யோசிக்கின்றனர். இப்படியாக அனைவரும் பேசி கொண்டு இருக்கும் போது மீனா தனம் “அக்கா எல்லாரையும் சப்போர்ட் பண்ணுவாங்க, ஆனா, எனைய மட்டும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க” என்று கூறிவிடுகிறார். இதனால் முல்லைக்கு கோபம் வந்து விடுகிறது. இருவரும் சண்டை போடுவதை பார்த்து அவர்களை தனம் அதட்டி அடக்கி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here