கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
ஊரடங்கு:
நாட்டில் கடந்த மாதம் முதல் கொரோனா நோய் பரவல் இரண்டாவது அலையை தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் முழு நேர அல்லது பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் தற்போது நாட்டில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு சுமார் 3 லட்சத்தை நெருங்கி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை முன்னிட்டு தற்போது நாட்டில் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே புதிய உச்சத்தை கண்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டது. இருந்தும் அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் தற்போது வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
அதன்படி அங்கு இனி வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது காலை 6 மணி முதல் 10 மணி வரை பால், காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டலில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி, பள்ளி, கல்லூரி, திரையரங்கம், வழிபட்டு தளங்கள் போன்றவற்றிற்கு ஊரடங்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற மே மாதம் 4ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.