சிவகாமியின் வார்த்தையை மீறி ஸ்டேஷன் செல்லும் சந்தியா – விறுவிறுப்பான ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!!

0

‘ராஜா ராணி 2’ சீரியலில் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்யும் ரவுடிகளை அடையாளம் காட்ட வேண்டாம் என சந்தியாவை சிவகாமி கேட்டுக்கொண்டார். அதை மீறி சந்தியா ரவுடிகளை காட்டி கொடுப்பாரா என விறுவிறுப்பாக வெளியாகியுள்ளது ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ.

‘ராஜா ராணி 2’ ப்ரோமோ

‘ராஜா ராணி 2’ சீரியலில் மற்றவர்களுக்கு நல்லது செய்ய போய் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார் சந்தியா. வீட்டில் நடந்த கலவரத்தால் ரவுடிகளின் விஷயத்தில் தலையிட வேண்டாம் என சரவணனின் அம்மா சிவகாமி சந்தியாவிடம் கூறியிருக்கிறார். இதை எதிர்த்து சந்தியா என்ன செய்யப்போகிறார் என வெளியாகியுள்ளது இந்த வார ப்ரோமோ.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் ரவுடிகளை அடையாளம் காட்ட சந்தியாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வருகிறார் சரவணன். உங்க ஆசைப்படி ரவுடிகளை அடையாளம் காட்ட தான் போலீஸ் ஸ்டேஷன் வந்துருக்கோம் என சரவணன் கூறுகிறார். அதற்கு வேண்டாம் என மறுக்கும் சந்தியா, இதனால் குடும்பத்தில் தேவையில்லாமல் பிரச்சனை வரும் என பயப்படுகிறார்.

ஷகிலாவின் மகளுடன் அஷ்வின் எடுத்துக்கொண்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

நீங்க எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அத பண்ணுங்க என உறுதி கூறுகிறார் சரவணன். நீங்க எப்போதுமே உண்மையே பேசுறீங்க, நேர்மையா இருக்கணும்னு நெனைக்குறீங்க. நான் உங்களுக்காக எப்போதுமே துணை நிற்பேன் என கூறி சந்தியாவை ஸ்டேஷனுக்குள் அழைத்து செல்லுகிறார் சரவணன்.

சிவகாமியின் வார்த்தையை மீறி ஸ்டேஷனுக்குள் செல்லும் சந்தியா, ரவுடிகளை அடையாளம் காட்டினாரா, இதனால் குடும்பத்தில் உருவாகப்போகும் புதிய பிரச்சனைகளை எவ்வாறு சந்தியா சமாளிக்கப்போகிறார் என இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது ராஜா ராணி 2 தொடர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here