ராஜா ராணி 2 – ‘சரவணனுக்கு சந்தியா பொருத்தமானவன் இல்லைனு புரியவைப்பேன்’! சவால் விடும் சிவகாமி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து சந்தியாவிற்கு பல வேலைகளை கொடுத்து திணறடித்து வருகிறார். சந்தியா கஷ்டப்படுவதை பார்த்து அவருக்கு முழு உறுதுணையாக இருக்கிறார் சரவணன்.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் தற்போது சந்தியாவை தொடர்ந்து டார்கெட் செய்து வருகிறார் சிவகாமி. தன் மகனுக்கு இவர் பொருத்தமானவள் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக பல வேலைகளை செய்து வருகிறார். எங்கே இருவரும் நன்றாக பழகி கடைசியில் இந்த படிப்பு அவர்களுக்கு இடையே பிரச்சனையாகி விடுமோ என்று பயப்படுகிறார் சிவகாமி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தொடர்ந்து சந்தியாவிற்கு பல டார்ச்சர்களை கொடுத்து வருகிறார். சந்தியா நேற்று அம்மியில் அறைந்த சட்னி மிகவும் மோசமாக இருக்க சிவகாமி கண்டபடி திட்டுகிறார். இந்த சட்னியை கீழ ஊத்துங்க நாய் கூட சாப்பிடாது என்று எடுத்தெறிந்து பேசுகிறார்.

இதனால் அர்ச்சனா மிகவும் சந்தோசப்படுகிறார். இதனை பார்த்த சிவகாமி அர்ச்சனாவுக்கு இரண்டு டோஸ் விடுகிறார். மேலும் அர்ச்சனாவிடம் இந்த மாதத்திற்கான செலவு காசை எப்போ கொடுக்க போறீங்க என்று கேட்கிறார். அர்ச்சனா இதனை எப்படி சமாளிப்பது என்று முழித்துக்கொண்டுள்ளார்.

நடிகை டாப்ஸி, இயக்குனர் அனுராக் காஷ்யப் வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனை!!

இப்படி ஒரு பக்கம் இருக்க சந்தியாவிடம் துணிகளை துவைக்க சொல்கிறார் சிவகாமி. வாஷிங் மெஷின் இல்லாமல் கையாலேயே துவைக்க சொல்கிறார். துவைக்க தெரியாமல் சந்தியா முழிக்க சிவகாமி மேலும் திட்டி விடுகிறார். எப்படியோ துவைத்து விட்டு சந்தியா துணியை காயப்போட அப்பொழுது சரவணன் கடலை மாவு எடுப்பதற்காக வருகிறார்.

சிவகாமி பொண்டாட்டியை பார்க்க தானா வந்த என்று வம்புக்கு இழுக்க அப்படி எல்லாம் இல்லை என்று சமாளிக்கிறார். மேலும் வீட்டு வேலை பார்க்கும் மயிலு சந்தியா கஷ்டப்படுவதை சொல்ல சந்தியாவிற்கு உதவி செய்கிறார் சரவணன். சந்தியா வேலை அலுப்பில் தூங்க செல்ல சரவணன் சந்தியாவை சாப்பிட அழைக்கிறார்.

சந்தியாவால் எழுந்திரிக்க கூட முடியவில்லை. சந்தியாவிற்கு பாலை காய்ச்சி எடுத்து வர கிச்சனுக்கு செல்கிறார் சரவணன். அப்பொழுது மயிலு காலையில் நடந்த அனைத்தையும் கூறுகிறார். ரூமிற்கு வரும் சரவணன் சந்தியாவை எழுப்பி பாலை கொடுக்க அவரின் பாசத்தை நினைத்து கண்கலங்குகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here