ஆபாச பட விவகாரம்: ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஜூலை 27 வரை போலீஸ் காவல்!!

0

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் மற்றும் தொழிலதிபரான ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்து செல்போன் செயலிகள் மற்றும் OTT தளங்களில் வெளியிட்டதாக கடந்த ஜூன் 19 ஆம் தேதி மும்பை போலீஸ் இவரை கைது செய்தது.

ராஜ் குந்த்ரா கைது செய்வதற்கு முன்பே இவருடன் உடந்தையாக இருந்த கம்மத்தை போலீசார் கைது செய்தனர். ராஜ் குந்த்ரா கைது ஆனதை தொடர்ந்து நடிகை கரிகா சோனா சுமன், ராஜ் குந்த்ரா நடத்திய ஆடிசனின் போது உடம்பில் ஆடை இல்லாமல் நடிக்கச் சொன்னதாக வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

போலீசார் இவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களை அவர் கூறியுள்ளார். தொடக்கத்தில் வெப் சீரிஸ் என்று கூறிவிட்டு பண ஆசை காட்டி மாடல் அழகிகளை ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளனர். ராஜ் குந்த்ராவின் வங்கிக்கணக்கில் இருந்த 7 கோடி ரூபாயை போலீஸார் முடக்கியுள்ளனர்.

தற்போது ராஜ் குந்த்ரா மீது IPC 420,34,292,293 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் ராஜ் குந்த்ரா போலீஸ் காவலில் ஜூலை 27 ஆம் தேதி வரை வைக்கப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here