தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சமந்தா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. சென்னை பெண்ணான சமந்தாவிற்கு தமிழ் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் தான் தமிழில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வந்தார்.
அவரது முதல் படமே தமிழ் மாஸ்கோவில் காவேரி என்ற திரைப்படம் தான். அதன் பிறகு தான் தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் நடித்திருந்தார். அந்த படத்தில் தான் ஆரம்பித்தது இருவருக்குமான நட்பு.
அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். முன்னணி நடிகையாகும் அளவிற்கு இவரது வளர்ச்சி இருந்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இவரை வீட்டில் அனைவரும் யசோதா என்று தான் அழைப்பார்களாம். மேலும் பல போராட்டங்களுக்கு பிறகு தான் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களது திருமணத்திற்கு பல எதிர்ப்புகள் இருந்ததாம். அதன் பிறகு தான் திருமணம் நடந்துள்ளது.
இப்படி இருக்க திருமணத்திற்கு பிறகும் இவருக்கு வாய்ப்புகள் குவிய தான் செய்தது. தற்போது வரை ரசிகர்களின் கனவுக்கன்னி தான் சமந்தா. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைபடம் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்