தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்..?
தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நெல்லை, அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்தது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |