விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து, பலியானோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு – ஆந்திர முதல்வர்..!

0

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விஷவாயுக்கசிவு விபத்தினால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.

ரசாயன ஆலை:

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆர்ஆர் வெங்கடாபுரம் கிராமத்தில் செயல்படும் எல்ஜி பாலிமர்ஸ் எனப்படும் ரசாயன தொழிற்சாலையில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிந்தது. அதிக அழுத்தம் காரணமாக ஆலையை சுற்றி பல கிலோமீட்டர்களுக்கும் இந்த விஷவாயு பரவியது. இதனால் அதிகாலையில் நடந்து சென்றவர்களும், அந்த பகுதியில் வசித்தவர்களும் இதனை சுவாசித்ததால் மயங்கி விழுந்தனர்.

13 பேர் பலி:

தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த ஆந்திர போலீசார் அதனை சுற்றியுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மக்களை வெளியேற்றினர். விஷவாயு தாக்கியதால் தற்போது 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல் கூறினார்.

மேலும் விஷவாயு தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி நிவாரணமும், அதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு நீண்ட நாட்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும், நிலைமையை கண்காணிக்கவும் உயர் அதிகாரிகளை நியமித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here