தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரமாக பல இடங்களில் கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
6 மாவட்டங்களில் மழை:
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |