கொரோனா உறுதி செய்யப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் வீட்டு சாப்பாடு கேட்டு அடம்பிடித்ததுடன் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த நோயாளி மீது போலீசார் வழக்குபதிவு.
கொரோனா நோயாளி..!
கோவை போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி, கணவன் மீதுள்ள பாசத்தில் பிரியாணி கொண்டு வந்துள்ளார். ஆனால், கொரோனா சிகிச்சையில் இருப்பதால் வீட்டில் தயார் செய்யப்பட்டு கொண்டுவரும் எந்த உணவையும் உட்கொள் அனுமதிக்க முடியாது என மருத்துவர்கள் கண்டிப்பாக கூறியுள்ளனர்.
பிரியாணியால் ஆத்திரம்..!
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தீயணைப்பு கருவியை எடுத்து கொரோனா வார்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளார். இதையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் போலீசார் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |