சில தினங்களுக்கு முன்பு ரயில்வே துறை ரயில் நிலையத்தில் எடுக்கப்படும் பிளாட்பார்மின் டிக்கட்டினை அதிகரித்தது. தற்போது அதற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
ரயில்வே:
கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் பல துறைகள் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ரயில்வே துறை மிக பெரிதாக பாதித்தது. மேலும் ஊழியர்களுக்கு வேளைக்கு வராமலே ஊதியம் வழங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ரயில்வே துரையின் பொருளாதாரம் மிகவும் பாதித்தது. தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில் ரயில்வே துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இருந்தும் தற்போது வரை முழு அளவில் ரயில்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சில தினங்களுக்கு முன்பு ரயில்வே நிலையங்களில் எடுக்கப்படும் ரயில்வே டிக்கட்டின் விலையை ரயில்வே துறை அதிகரித்தது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்படி பிளாட்பாரம் டிக்கட்டின் விலையை ரூ.10ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தியது. மேலும் மும்பையில் விலையை ரூ.50 ஆக உயர்த்தியது. தற்போது இதற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
அதன்படி ரயில்வே கூறியதாவது, தற்போது முழுவதுமாக கொரோனா நீங்காத நிலையில் மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பு இன்றி ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் பிளாட்பார்மில் அச்சமின்றி கூட்டம் கூடி வருகின்றனர். இதனை தடுக்கும் நடவடிக்கையாக இதனை நாங்கள் செய்துள்ளோம். மேலும் கடந்த கொரோனா காலத்திலும் கூட இதனை செய்தோம். பின்பு அதன் விலையை குறைத்தோம். நடைமேடை டிக்கட்டின் விலையை அதிகரிக்க கடந்த 2015ம் ஆண்டு முதல் மண்டல ரயில்வே அலுவலகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.