யூடுயூப்பில் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவிட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள பப்ஜி மதன், தற்போது தன் மீது உள்ள குண்டர் சட்டதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பின்னர் மதன் போலீசாரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவர் மேல் குண்டர் சட்டம் போடப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் இவரின் மனைவிக்கும் தொடர்பு இருந்ததால் போலீசார் அவர் மனைவியையும் கைது செய்தனர்.
பின்னர் இவர்களின் தரப்பில் அளிக்கப்பட்ட ஜாமினில் மதனின் மனைவிக்கு மட்டும் ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், மதன் தன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் போட்டியாளர்கள் தனக்கு கெட்ட பெயர் வாங்கி தரும் நோக்கில் தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றி உள்ளனர் என்றும், எனவே, தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு வரும் 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்