வாத்தி கம்மிங்.., 2 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கேறும் புரோ கபடி.., களத்தில் மல்லுக்கட்ட காத்திருக்கும் அணிகள்!!

0
வாத்தி கம்மிங்.., 2 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கேறும் புரோ கபடி.., களத்தில் மல்லுக்கட்ட காத்திருக்கும் அணிகள்!!
வாத்தி கம்மிங்.., 2 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கேறும் புரோ கபடி.., களத்தில் மல்லுக்கட்ட காத்திருக்கும் அணிகள்!!

9-வது புரோ கபடி சீசனுக்கான முதல் போட்டி குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தபாங் டெல்லி VS யூ மும்பா

கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்து புரோ கபடி இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதன்படி 12 அணிகள் களமிறங்கும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்த போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் வீரர்களை படுபயங்கரமாக தயார் செய்து வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு புரோ கபடி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனுக்கான முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யு மும்பா அணிகள் களம் காண உள்ளனர்.

இந்த வரும் 7 ஆம் தேதி பெங்களுருவில் உள்ள ஸ்ரீ காந்தீரவாவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அரங்கேற உள்ளது. இந்த இரு அணிகளுமே இதற்கு முன்னர் நடைபெற்ற சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் புரோ கபடி சீசனுக்கான முதல் போட்டியே அனல் பறக்கும் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here