தற்போது ஆசிய அளவிலான ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக வீரர் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். தற்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.
துப்பாக்கி சுடுதல் போட்டி:
தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பிலான விளையாட்டு போட்டிகளும் நடைபெற துவங்கியுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போட்டியில் பங்கு பெரும் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் போட்டியில் பங்கு பெற முடியும். தற்போது ஆசிய அளவிலான ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழக வீரர் அசத்தல்:
இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 24 துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் ஆசிய அளவிலான ஆண்களுக்கான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஓடிடியில் தனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ ரிலீஸ் ஆகுமா?? தயாரிப்பாளர் மவுனம்!!
Men’s trap ஈவெண்ட்டில் அவர் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இந்த போட்டியில் மொத்தமாக இந்தியா வீரர்கள் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.10 மீட்டர் ஏர் பிஸ்டல், ஏர் ரைபிள் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா வீரர்கள் பதக்கம் அடித்துள்ளனர். வெண்கல பதம் வென்ற தமிழக வீரர் ப்ரித்விராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.