தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். எப்படியாவது முன்னணி இடத்தை பிடித்து விட வேண்டும் என போராடும் யாஷிகா தொடர்ந்து பல போட்டோஷூட்டுகளை நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
யாஷிகா ஆனந்த்
தமிழில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாஷிகா. அதற்கு முன்னரே அவர் மாடலிங் துறையில் கால் பதித்திருந்தார். தனது பள்ளி பருவத்திலேயே நடிப்பின் மீது ஆசையை வளர்த்து கொண்டவர்.
படிப்படியாக தனது முயற்சியால் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ இந்த படம் அவருக்கு நல்ல பிரபலத்தை பெற்று தந்தது. அனாலும் யாஷிகாவிற்கு அடுத்த படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இப்பொழுது தான் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவது ட்ரெண்ட்டாகி வருகிறதே. பல படங்களில் நடித்தும் கிடைக்காத புகழ் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவது மூலம் கிடைக்கிறது.
அதே யுக்தியை தான் யாஷிகா பின்பற்றி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாதியில் வெளியேறிய இவருக்கு அவ்வளவாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து பல படங்களுக்கு முயற்சிகள் மேற்க்கொண்டு தான் வருகிறார். அனாலும் கிடைத்த பாடில்லை.
லாக்டவுன் ஆரம்பித்த நாளில் இருந்து போட்டோஷூட் செய்வதை வழக்கமாக்கி வருகிறார். மேலும் கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகிறார் யாஷிகா.
ஐட்டம் டான்ஸ், கெஸ்ட் ரோலில் நடிப்பது என தனது முழு முயற்சியையும் கொடுத்து வருகிறார். தற்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தற்போது அவர் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.