அடிலெய்டு டெஸ்டில் இடம்பிடிக்காத காரணத்தினால் தனது அறைக்கு சென்று நான் அழுதேன் என்று தனது மனதில் உள்ள கவலையை குறித்து விளக்கமளித்துள்ளார் ப்ரித்வி ஷா.
ப்ரித்வி ஷா:
துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக வளம் வருபவர் தான் ப்ரித்வி ஷா. இவர் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் அப்போது இவரது பார்ம் மிக மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் முதல் இன்னிங்சில் டக் அவுட் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றினார். இதனால் இவர் அடுத்த நடந்த போட்டிகளில் இடம் பெறவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இது குறித்து பேசிய ப்ரித்வி ஷா கூறுகையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் போது நான் டென்ஷனாக இருந்தேன். ஏதோ தவறாக நடப்பது போல் தெரிந்தது. மேலும் நான் எதற்கும் பயன்படாதவானாக உணர்ந்தேன். எனது அறைக்கு சென்று நான் மிகவும் அழுதேன்.
#SLvsWI டெஸ்ட் தொடர் – மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அறிவிப்பு!!
பின்பு எனது தவறுகள் அனைத்தையும் திருத்த முயன்றேன் என்று தனது மனதில் உள்ள கவலையை மிக உருக்கமாக தெரிவித்தார். ஆனால் இதற்கு பின்னர் ப்ரித்வி ஷா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது நடக்கும் விஜய் ஹசாரே கோப்பையில் இவர் விளையாடிய 7 போட்டியில் 754 ரன்களை குவித்து அசத்தியுள்ளார் ப்ரித்வி ஷா.