சீரியல் நடிகை ரித்திகா உடல்நல குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவருக்கு ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ரித்திகா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரில் நடிகர் சஞ்சீவுக்கு தங்கையாக அறிமுகமானவர் ரித்திகா. இந்த தொடரில் கார்த்திக்கு தங்கையாக நடித்து வந்த நடிகை வைஷாலி தொடரிலிருந்து விலகியதை அடுத்து, நடிகை ரித்திகா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவரது முதல் தொடரிலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். ‘ராஜா ராணி’ தொடர் முடிவடைந்ததும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சாக்லேட்’ என்ற தொடரில் நடிகைக்கு தங்கையாக நடித்து வந்தார் ரித்திகா. கொரோனா காரணமாக இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அரசியல்வாதியை மணமுடிக்கும் தனுஷ் பட நடிகை – வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்!!
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ரித்திகா. சில வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த ரித்திகா நான்கு எபிசோடுகளிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக ரித்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘பயப்படும் அளவுக்கு பெரிதாக ஒன்றுமில்லை. குறைந்த ரத்த அழுத்தமும், ஃபுட் பாய்சனும் ஏற்பட்டுள்ளது. நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன். உங்களது அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.