நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று எப்படி கூற முடியும் ஸ்டாலினுக்கு என்ன ஜோசியம் தெரியும் என்று எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி:
தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தற்போது எடப்பாடி பழனிச்சாமி சேலம் ஓமந்தூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வந்தார். பின்பு தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், புதுவையில் தொகுதி பங்கீடு குறித்து சுமுகமான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
விரைவில் புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்று அறிவித்தார். மேலும் தமிழகத்தில் சீட் கிடைக்காத அனைவரிடமும் பேசி சமாதானம் செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாங்குநேரி விக்கிரவாண்டி தேர்தலில் கருத்துக்கணிப்பை பொய்யாக்கி அதிமுக வெற்றி பெற்றது. அதுபோல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறும்.
அரசியல்வாதியை மணமுடிக்கும் தனுஷ் பட நடிகை – வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்!!
ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார். அவருக்கு என்ன ஜோசியமா தெரியும் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதிகளை முழுவதுமாக தெரிந்துகொண்டு அதனை பற்றி பேசுகிறேன் என்று தெரிவித்தார். இந்த தேர்தலில் மக்கள் அனைவரையும் அனைத்தையும் எண்ணி பார்த்து வாக்களித்து அதிமுகவை வெற்றிபெற செய்வார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.