பாரா-பேட்மிண்டன்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய நட்சத்திர வீரர்கள்!!

0
பாரா-பேட்மிண்டன்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய நட்சத்திர வீரர்கள்!!
பாரா-பேட்மிண்டன்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய நட்சத்திர வீரர்கள்!!

ஸ்பெயினில் நடைபெற்று வரும் பாரா-பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் பிரமோத் பகத், தாய்லாந்து வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பாரா-பேட்மிண்டன்

ஸ்பெயினின் விட்டோரியாவில் சர்வதேச அளவிலான பாரா-பேட்மிண்டன் லெவல் 2 தொடர் கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா சார்பாக தீப் ரஞ்சன் பிசோய், மனோஜ் சர்கார், பிரமோத் பகத் மற்றும் சுகந்த் கதம் உள்ளிட்டோர் பங்கு பெற்று விளையாடி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், இந்தியாவின் பிரமோத் பகத் ஒற்றையர் பிரிவில், தாய்லாந்தின் மோங்கோன் பன்சுனை எதிர்த்து காலிறுதி போட்டியில் மோதினார். இந்த போட்டியில், முதல் செட்டை 16-21 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் இழந்தார். இதையடுத்து, எழுச்சி கண்ட இந்தியாவின் பிரமோத் பகத் அடுத்த 2 செட்களையும் 21-12 மற்றும் 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி 2-1 என போட்டியை வென்றார்.

ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்த ரிக்கி பாண்டிங்…, ரோஹித் சர்மா வெளியிட்ட அப்டேட்!!

இந்த போட்டியில், பிரமோத் பகத் வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதிக்குள் நுழைந்தார். இதனை தொடர்ந்து, ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், பிரமோத் பகத்-சுகந்த் கதம் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் சக நாட்டவர்களான தீப் ரஞ்சன் பிசோய்-மனோஜ் சர்கார் ஜோடி எதிர்த்து போட்டி போட உள்ளனர். இந்த தொடருக்கு பிறகு, மார்ச் 1 முதல் 5 வரை கிரேடு 1 போட்டிகள் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here