இயக்குனர் மணிரத்னம் இயக்கி இருக்கும் பொன்னியின் செல்வன் படம் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்நிலையில் மணிரத்னம்,விக்ரம், ஜெயம் ரவி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
பொன்னியின் செல்வன்:
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுத்துள்ளார். இதில் விக்ரம், த்ரிஷா,ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதனை எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் உள்ளிட்டோர் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியை தழுவினர்.
நீண்ட கால முயற்சிக்கு பின்னர் இயக்குனர் மணிரத்னம் இதை சாத்தியப்படுத்தி உள்ளார்.இந்நிலையில் ஜூலை 8ம் தேதி சென்னை ட்ரேட் சென்டரில் இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த படம் செப்டம்பர் 30-ல் வெளி வர இருக்கும் நிலையில் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பிக்பாஸ்-க்கு பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் ஓவியா – போட்டோவுடன் வெளியான பதிவு!!
தற்போது ஆதித்திய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் மற்றும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி ஆகியோர்களின் நெற்றியில் நாமம் இடப்பட்டது தவறு என்று இயக்குனர் மணிரத்னம், விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர்களின் மீது செல்வம் என்பவரின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இப்படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்