பழைய பகை ஒன்றை மீண்டும் தூசி தட்டும்  நடிகை ராதிகா – 55 ஆண்டுக்குப் பின் சூடு பிடிக்கும் வழக்கு!!

0
ஹீரோவாக களமிறங்கும் நடிகை ராதிகாவின் மருமகன் - சன் டிவியில் உதயமாகும் புத்தம் புதிய தொடர்!!

நடிகை ராதிகா, தனது ராடான் நிறுவனத்தின் மூலம்  எம்ஜிஆர் மற்றும் தன் தந்தை எம்.ஆர்.ராதா இடையே நடந்த மோதலை வெப் தொடராக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ராதிகா. தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என பல துறைகளிலும் கால் பதித்து வரும் இவர் ராடான் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சமீப காலமாக, பிரபலங்களின் பயோபிக் படம்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளதால், ஒரு புதிய முயற்சி ஒன்றை இவர் மேற்கொள்ள உள்ளதாக பேசப்படுகிறது.

அதாவது, கடந்த 1967 ஆம் ஆண்டு, ராதிகாவின் தந்தை எம்.ஆர். ராதா, நடிகர் எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டார். மேலும், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்த நிலையில், இந்த வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு இந்த ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது.

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை, 55 ஆண்டுகள் கழித்து வெப் தொடராக  எடுக்க ராதிகா திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் தந்தை குறித்த படம் என்பதால், ராதிகா உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக காட்டுவாரா? என நெட்டிசன்கள் பகிரங்கமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here