நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை – ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகிறதா..?

0

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நாளையுடன் (ஏப்ரல் 14) முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 9000கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் இழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க பல மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே பஞ்சாப், ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய அரசு அறிவிக்கும் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற போவதாக தெரிவித்து விட்டனர். இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here