பல நேரங்களில் நம் முகம் சில சருமம் பிரச்சனைகளை சந்தித்து வருவது வழக்கம். இதனால் நம் முகத்தின் அழகு பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதற்காக பலர் கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இனி அதற்கு அவசியமே இருக்காது. ஏனென்றால் உடலுக்கு நன்மையை கொடுக்கும் வெற்றிலையை வைத்து ஒரு சூப்பரான பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தேவையான பொருட்கள்;
- வெற்றிலை – 5
- தேன் – 3 டீஸ்பூன்
- தயிர் – 1 டீஸ்பூன்
- அரிசி மாவு – 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்;
இந்த பேஸ் பேக் தயாரிப்பதற்கு 5 வெற்றிலையை எடுத்து சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். அதோடு ஒரு டீஸ்பூன் அரிசி மாவு. ஒரு டீஸ்பூன் தயிர். 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது நாம் முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு, இந்த பேஸ் பேக்கை அப்ளை செய்து கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு 20 நிமிடங்களுக்கு கழித்து முகத்தை கழுவி விடவும். இதன் பிறகு ஆலுவேரா ஜெல் இருந்தால் முகத்தில் அப்ளை செய்து, ஜென்டில் மசாஜ் கொடுத்தால் நல்லது. மேலும் இந்த பேஸ் பேக்கை நாம் பருக்களால் பாதிக்கப்படும் போதும், அப்ளை செய்து வந்தால் உடனடியான தீர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.